இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படாத ஜூன் 12!

மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறித்து...

News image

61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாத மேட்டூர் அணை - டிஎன்எஸ்

Updated On :12 ஜூன் 2026, 11:04 am IST

மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கும். அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பு நீர்பாசன ஆண்டில் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) மேட்டூர் அணையின் வரலாற்றில் 92 ஆவது ஆண்டாக குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு தள்ளிப்போனதால் டெல்டா மாவட்டங்களில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து குறித்த நாளில் குறுவை சாகுபடிக்கு 1934, 1935, 1939, 1941, 1965, 1979, 1980, 1984, 1992, 1993, 1994, 1997, 2000, 2001, 2006, 2008, 2020, 2021, 2023, 2025 ஆகிய 20 ஆண்டுகள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 1936, 1937, 1938, 1940, 1942 ,1943, 1944, 1945, 1947, 2011, 2022 ஆகிய 11 ஆண்டுகள் ஜூன் 12-க்கு முன்பாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. இதில் பல ஆண்டுகள் குறுவை பரும் முடிந்த பிறகே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று(ஜூன் 12) காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 79.56 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 540 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 41.52 டி.எம்.சியாக உள்ளது.

Summary

Regarding the fact that,in the 92-year history of the Mettur Dam, water has not been released for Kuruvai cultivation this year—marking the 61st such instance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.