5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

கோவை: 23 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள்!

கோவையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் 90 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்.

News image

கோவையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை - Din

Updated On :21 ஆகஸ்ட் 2024, 8:36 am IST

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 23 கடைகளில் காலாவதியான மற்றும் லேபிள் விவரங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 90 லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானத்தை குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் குளிர்பான ஆலைகள் மற்றும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கோவையிலும் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 9 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

கோவை மாநகரில் காந்திபுரம், வ.உ சி பூங்கா, காந்தி பூங்கா, ஆர்.எஸ். புரம், பீளமேடு, கணபதி, சாய்பாபா காலனி, வடவள்ளி, சுந்தராபுரம், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதியில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 213 சில்லறை விற்பனை கடைகள், 22 தயாரிக்கும் நிறுவனங்கள்,18 மொத்த விற்பனையாளர் என மொத்தம் 253 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 23 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் முழுமையான லேபிள் விவரங்கள் இல்லாமல் குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

மேலும், இதுபோன்ற காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.