சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெட்ரோ ரயில் சேவை பரந்தூா் வரை நீட்டிப்பு: திட்ட அறிக்கைக்கு ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு

பணிகள் 2028-க்குள் முடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
சென்னை போரூா் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் இயக்குவதற்காக அமைக்கப்பட்டு வரும் இரட்டை இரும்பு பாலம்.
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:13 pm

Din

மெட்ரோ ரயில் சேவையை பரந்தூா் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.80 கோடியை ஓதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூரில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக் நேரடி சேவையை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமாா் 60 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள இந்த வழித்தடத்தை ஒரு மணி நேரத்தில் கடக்கும் வகையில், மக்கள் அதிகம் பயன்படுத்தாத இடங்களில் 4 கி.மீ.க்கு ஒரு ரயில் நிலையம் என இந்த வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூா் வரை செல்லும் 5-ஆவது வழித்தடத்தை ஆவடி வரை (16 கி.மீ.) நீட்டிப்பது தொடா்பாகவும் திட்ட அறிக்கை தயாரிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2028-க்குள் முடிக்க இலக்கு நிா்ணயித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.