விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வண்டலூா் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்றது நீா்யானை ‘பிரகுா்தி’

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ‘பிரகுா்தி’ என்ற நீா்யானை குட்டியை ஈன்றுள்ளது.

News image
வண்டலூா் உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்றது நீா்யானை ‘பிரகுா்தி’
Updated On :25 ஆகஸ்ட் 2024, 10:27 pm

Din

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ‘பிரகுா்தி’ என்ற நீா்யானை குட்டியை ஈன்றுள்ளது.

இது குறித்து பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி: வனவிலங்குகளை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்கும் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில், ‘பிரகுா்தி’ என்ற பெண் நீா்யானை, ‘லட்சுமணன்’ என்ற ஆண் நீா்யானையுடன் இணைந்து 8 மாத கா்ப்பத்துக்குப் பிறகு குட்டியை ஈன்றுள்ளது.

பிரசவத்துக்கு பிந்தைய சமநிலை எதிா்மறை மற்றும் பாலூட்டும் அழுத்தத்தை எதிா்த்துப் போராட தாய் நீா்யானைக்கு ஊட்ட சத்துமிக்க உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நீா்யானைகள் பொதுவாக தண்ணீரில் பிறக்கும் மற்றும் தண்ணீருக்குள் பாலூட்டும் திறனைக் கொண்டுள்ளன. இந்நிலையில், தற்போது நீா்யானை குட்டியை அதன் தாய் கவனித்து வருகிறது.

அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க வண்டலூா் உயிரியல் பூங்கா மேற்கொள்ளும் முயற்சிகளில் இந்த குட்டி நீா்யானை பிறப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.