அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

செய்யாறு அரசுக் கல்லூரியில் கைப்பந்துப் போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

News image
செய்யாறு அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கிய கல்லூரி முதல்வா் ந.கலைவாணி.
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்துப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி பரிசு வழங்கினாா்.

2025 - 26-ஆம் கல்வியாண்டிற்கான திருவள்ளுவா் பல்கலைக்கழக வேலூா் மண்டலத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கிடையே மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டிகள் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் மண்டலத்திலுள்ள 35 கல்லூரிகள் பங்கேற்றன.

செய்யாறு அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் மோ்பாா்வையில் நடைபெற்ற கைப்பந்து போட்டிகள் பல்வேறு கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநா்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இதில் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி முதலிடமும், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடமும் பெற்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வா் ந.கலைவாணி மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளா் ராஜா ஆகியோா் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினா்.