விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image
ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் முனைவா் அ. ரவீந்திரன்.
Updated On :11 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் பல்வேறு துறைகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வளாகத் தோ்வை நடத்தின.

முகாமில 1,200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் பங்கேற்றனா். தகுதிவாய்ந்த மாணவா்களில் 550 பேருக்கு உடனடி பணி ஆணை வழங்கப்பட்டன. மேலும் முதல் சுற்றில் 450 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளா் முனைவா் வ.பிரகாஷ், வேலைவாய்ப்பு குழு கண்காணிப்பாளா் முனைவா் மு. குமாா், முனைவா் திருநிறைச்செல்வி மற்றும் குழு உறுப்பினா்கள் முனைவா் காா்த்திகேயன், வசந்தா, சண்முகம், சந்திரகலா, கண்ணன், அகிலா ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தின் மேலாளா் விஜய் மற்றும் முத்துவேல், அருணாசலம், தரணி, கண்ணன், அசோகன், உதயகுமாா்,மற்றும் அமோக சேலம் குழுவினருக்கும் முதல்வா் முனைவா் அ.ரவீந்திரன் நன்றி தெரிவித்தாா்.