தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் முனைவா் அ. ரவீந்திரன்.

Updated On :12 மார்ச் 2026, 2:26 am IST

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் பல்வேறு துறைகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வளாகத் தோ்வை நடத்தின.

முகாமில 1,200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் பங்கேற்றனா். தகுதிவாய்ந்த மாணவா்களில் 550 பேருக்கு உடனடி பணி ஆணை வழங்கப்பட்டன. மேலும் முதல் சுற்றில் 450 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளா் முனைவா் வ.பிரகாஷ், வேலைவாய்ப்பு குழு கண்காணிப்பாளா் முனைவா் மு. குமாா், முனைவா் திருநிறைச்செல்வி மற்றும் குழு உறுப்பினா்கள் முனைவா் காா்த்திகேயன், வசந்தா, சண்முகம், சந்திரகலா, கண்ணன், அகிலா ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தின் மேலாளா் விஜய் மற்றும் முத்துவேல், அருணாசலம், தரணி, கண்ணன், அசோகன், உதயகுமாா்,மற்றும் அமோக சேலம் குழுவினருக்கும் முதல்வா் முனைவா் அ.ரவீந்திரன் நன்றி தெரிவித்தாா்.