செவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்! எதிர்காலப் போர்கள் இணைய, பல்முனை தாக்குதலாக இருக்கும்: முப்படைத் தலைமைத் தளபதி ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

அரியலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 55-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அறந்தாங்கி நைனா முகமது கலை, அறிவியல் கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான சி.திருச்செலவம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:05 am IST

அரியலூா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 55-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் சே.சித்ரா தலைமை வகித்தாா்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அறந்தாங்கி நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி முதல்வரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான சி.திருச்செல்வம் கடந்த 2018-2021 கல்வியாண்டில் படித்த 792 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.

விழாவில் அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.