வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வருகின்ற நிலையில், நேற்றிரவு வானம் சற்று மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. இதையடுத்து இன்று காலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வானம் மேகமூட்டத்துடனும் லேசான மழையும் பெய்து மனதுக்கு இதமான காலநிலையும் நிலவியது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒடிசா, ஆந்திர கரையோரம் அதற்கடுத்த 2 நாள்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் சென்னையில் வெய்யில் கொளுத்தும்! எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தலும்... சுயேச்சை வேட்பாளா்களும்...
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!

சென்னையில் பல பகுதிகளில் மின்வெட்டு: மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த அறிவுரை
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை




