சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றி..

News image

அமெரிக்கா செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின். - din

Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:24 am IST

சென்னை: அமெரிக்க சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

துபை வழியாக அமெரிக்கா செல்லும் முதல்வரின் விமானம் நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட பிறகுதான், மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதனால், முதல்வர் சென்ற எமிரேட்ஸ் விமானம் புதன்கிழமை அதிகாலை துபை சென்றடையும் வரை அதிகாரிகள் பதற்றத்துடன் இருந்தனர்.

துபையில் தரையிறங்கிய விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.

17 நாள்கள் பயணமாக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், துபை சென்று அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, போலீஸார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் இந்த மிரட்டல், வெறும் புரளி எனத் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியதால் பயணிகளிடையே சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னை விமான நிலையத்துக்கு கிட்டத்தட்ட 10 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.