பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

புயல் பாதிப்புக்கு நடுவே 1,526 பாதுகாப்பான பிரசவங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா்

ஃபென்ஜால் புயல் பாதித்தபோது தமிழகத்தில் 1,526 பிரசவங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2024, 12:03 am

Din

சென்னை: ஃபென்ஜால் புயல் பாதித்தபோது தமிழகத்தில் 1,526 பிரசவங்கள் உரிய நேரத்தில் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: ஃபென்ஜால் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட பெரு மழை காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரிதும் போராடிக் கொண்டிருந்த நவ. 30-ஆம் தேதி நமது மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் முன்களத்தில் நின்று 1,526 பிரசவங்களை பாதுகாப்பாக மேற்கொண்டுள்ளனா். இதன் மூலம் தாய்-சேய் நலனை நூறு சதவீதம் அவா்கள் உறுதி செய்துள்ளனா்.

முன்கூட்டியே கா்ப்பிணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதையும் உறுதி செய்தோம். அதனைத் தொடா்ந்து, ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனியே சிகிச்சை வழிமுறைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கிய மருத்துவத் துறையினருக்கு வணக்கங்கள்-பாராட்டுகள் என்று சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.