கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

உள்ளாட்சித் தோ்தல் எப்போது?நீதிமன்றத்தில் அரசு தகவல்

வாா்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை முடிந்த பிறகுதான் உள்ளாட்சித் தோ்தல்..

News image

உயா்நீதிமன்றம்

Updated On :21 டிசம்பர் 2024, 10:30 pm

Din

வாா்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் ஆகியவை முடிந்த பிறகு தான் உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், முனியன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன.

இந்த நிலையில், வாா்டு எல்லை மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வாா்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா்-பி.தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தோ்தல் ஆணைய வழக்குரைஞா்ஆகியோா், வாா்டு மறுவரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது”என உத்தரவாதம் அளித்தனா். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.