சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைப்பு! அமைச்சர் நேரு

நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் தொடர்பாக..

News image
அமைச்சர் கே.என். நேரு- EPS
Updated On :6 ஜனவரி 2025, 6:03 pm

DIN

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக அமைச்சர் கே.என். நேரு திங்கள்கிழமை தெரிவித்தார்.

இனி கழிவுகளைக் கொட்ட வந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த அமைச்சர், தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூா், பழவூா், கொண்டாநகரம் சுற்றுவட்டார மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள், நீா்நிலைகளில் கேரள மாநில கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து மா்மநபா்கள் கொட்டினா். கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அவை, திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்டதற்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. இதைகொட்டியவா்கள் மீது கடும் நடவடிக்கை எ டுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினா்.

இதற்கிடையே தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கேரள மாநில குப்பைகளைத் திருப்பி எடுத்துச் செல்ல உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில், கேரள அரசு கழிவுகளை மீண்டும் எடுத்துச் சென்று மேலாண்மை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் கேரள மாநில வருவாய்த்துறையினா், சுகாதாரத்துறையினா் நேரில் வந்து ஆய்வு செய்து 16 லாரிகள் மூலம் கழிவுகளை திருப்பி எடுத்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.