பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பங்கேற்பு!

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு 100-வது பிறந்த நாள்.

News image

நல்லகண்ணுவுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Updated On :26 டிசம்பர் 2024, 10:48 am IST

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை கலந்து கொண்டார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நல்லகண்ணுவின் நூறாவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த விழாவில் நேரில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி, நல்லகண்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

“பொதுவுடைமை அமைப்புக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது.

நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற உறுதுணையாக பக்கபலமாக இருப்பவர் நல்லகண்ணு.

அமைதியாக, அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர் நல்லகண்ணு. தொடர்ந்து, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டி துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் மதசார்பற்ற கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல நிரந்தரக் கூட்டணி. தற்போதைய சூழலில், 200 அல்ல அதற்கு மேலும் வெல்வோம்” எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.