பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுகவினர் அமைதிப்பேரணியில் ஈடுபட்டனர். அண்ணா நினைவிடம் வரை பேரணியாகச் சென்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் திமுக அமைதிப்பேரணி நடைபெறுகிறது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, கனிமொழி எம்.பி., விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
திருவல்லிக்கேணி - வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி அண்ணா நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.
திமுகவினர் பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.