கோவை ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு: காரணம் என்ன?

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு: காரணம் என்ன?

கோவை: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2-ஆம் தேதி கோவை சத்தி ரோடு - சங்கனூர் சந்திப்பு அருகே காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால், பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரித்துள்ளார்.

அதனை விடியோ எடுத்த ஷர்மிளா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான தகவலுடன் பதிவிட்டதாக காவல் உதவி ஆய்வாளர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 506(ஐ), 509, 66சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோவையின் பெண் பேருந்து ஓட்டுநராக வலம்வந்த ஷர்மிளா திடீரென அவரது பேருந்து நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் பேருந்து ஓட்டுநராக இருந்தபோது திமுக எம்.பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், அவரை அழைத்து காரை அன்பளிப்பாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com