திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கட்கிழமை (இன்று) காலை மாசித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டம்.
திருச்செந்தூரில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் திங்கட்கிழமை (இன்று) காலை மாசித் திருவிழா பத்தாம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த 3 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தார். நிறைவு நாளான பத்தாம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் திங்கட்கிழமை (இன்று) காலை 6 மணியளவில் அலங்காரத்துடன் அம்மன் தேரில் எழுந்தருளி நான்குரதவீதி வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரா.அருள் முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன் கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com