தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தேர்வு செய்யப்படுவார்: கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்வது கிடையாது.தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

News image
சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
Updated On :16 பிப்ரவரி 2024, 10:14 am

DIN

சிதம்பரம்: காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்வது கிடையாது.தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தில்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு அறவழிப் போராட்டம்தான். மூன்று வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட போது கொடுக்கப்பட்ட உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை. போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசுகிறார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கோயிலை திறப்பதற்காக அபுதாபிக்கு மோடி செல்கிறார். கோயிலை திறப்பதற்கு பிரதமர் தேவையில்லை. ஊர் நாட்டாமையே கோயிலை திறப்பார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது.உடனடியாக கணக்கு காட்டப்படவில்லை என கூறி முடக்கி இருக்கிறார்கள்.அதற்கு விளக்கம்தான் கேட்க வேண்டுமே தவிர முடக்கக் கூடாது.

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.இதை ஏற்க முடியாது. தற்போதுகூட மணிப்பூரில் 4 இளைஞர்கள் சுடப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை 7 ஆயிரம் துப்பாக்கிகள் மட்டுமே திரும்ப வந்திருக்கிறது. இன்னும் 3 ஆயிரம் துப்பாக்கிகள் கலகக்காரர்கள் கையிலும், ஆர்எஸ்எஸ் காரர்கள் கையிலும் இருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பெறுவது தவறு என உச்ச நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை அளித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் பிரசாரம் செய்வது கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.