மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு: அதிமுக

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு விநியோகிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி| கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட பிப். 21 முதல் விரும்ப மனு விநியோகிக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற பிப். 21 முதல் மார்ச் 1 வரை நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com