பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், அபராத தொகை ரூ. 15,000-ஐ நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் செலுத்தினார்.