முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நாட்டிலேயே தமிழகம் முதலிடம்..: எந்தெந்த துறைகளில்!

நாட்டின் அனைத்து தளங்களில் பெருவளர்ச்சி பெற்று தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

News image

DOTCOM

Updated On :19 பிப்ரவரி 2024, 12:57 pm IST

நாட்டின் அனைத்து தளங்களில் பெருவளர்ச்சி பெற்று தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

சுமார் 2.07 மணி நேரம் உரையாற்றிய தங்கம் தென்னரசு, பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்க திட்டங்களையும் அறிவித்தார்.

அப்போது, நாட்டின் அனைத்து தளங்களிலும் தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:

கடந்த 75 ஆண்டுகளில் சில மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சி மட்டும் அடைந்தன. மற்ற சில மாநிலங்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூக குறியீடுகளில் மட்டும் முன்னேற்றம் அடைந்தன. மாற்றாக சமூக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம் என அனைத்து தளங்களிலும் முன்னேற்றம் அடைந்து தமிழ்நாடு முத்திரை பதித்துள்ளது.

குறிப்பிட்டுச் சொன்னால்,

  • ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் நாட்டிலேயே முதலிடம்

  • மின்னணுப் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதலிடம்.

  • புத்தொழில் சூழல் அமைவுக்கான முன்னணி மாநிலம்.

  • தொழிற்சாலைகளில் பங்கேற்கும் மகளிரின் பங்கு நாட்டிலேயே முதன்மை.

  • உயர்கல்விச் சேர்க்கையில் நாட்டில் முதலிடம்.

  • தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 146 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.