தமிழக மீனவருக்கு இலங்கை விதித்த தண்டனை

ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது
கோப்புப் படம்
கோப்புப் படம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்திய எல்லைப்பகுதியான கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 19 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.

இவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் படகு ஓட்டிச் சென்றதாக கூறப்படும் ஒருவருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com