இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: நாளை அடிக்கல் நாட்டுகிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திங்கள்கிழமை (பிப்.25) ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

News image

புல்லூா் தடுப்பணை (கோப்புப் படம்).

Updated On :25 பிப்ரவரி 2024, 12:37 pm

பாலற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக திங்கள்கிழமை (பிப்.25) ஆந்திர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுச்சூழல் மற்றும் கனிம வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

பாலாறு அணை தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிரச்னை தீர்ந்தது.

நாளை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.

தேர்தலுக்குப் பின் பாலாற்றில் மேலும் 2 தடுப்பணைகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு தடுப்பணையை கட்டுவதற்காக ஆந்திர அரசு நாளை அடிக்கல் நாட்டுவது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.