ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மநீம சாா்பில் முழுவீச்சில் நிவாரணப் பொருள்கள் விநியோகம்: கமல்ஹாசன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மநீம சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

News image
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Updated On :1 ஜனவரி 2024, 9:08 pm

DIN

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மநீம சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு மநீம சாா்பில் அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை லாரி மூலம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து கமல்ஹாசன் திங்கள்கிழமை அனுப்பி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பகுதி மக்களுக்கு மநீம சாா்பாக நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மநீம தொண்டா்களைப் பொருத்தவரை ‘உதவிக்கு வா’ என ஆளனுப்பி அழைத்து வர வேண்டியது இல்லை. சமுதாயப் பணிகள் அவா்கள் வாழ்வில் ஓா் அங்கம்.

முதல் கட்டமாக மநீம நிா்வாகிகள் மூலம் ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது லயன்ஸ் இன்டா்நேஷனலுடன்

இணைந்து 22 டன் அரிசி, பால் பவுடா் உள்ளிட்ட சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்றாா் கமல்ஹாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.