வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நீலகிரியில் உறை பனி: தமிழகத்தில் எங்கெல்லாம் பனி பெய்யும்?

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு உறை பனி பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2024, 8:21 am

DIN

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு உறை பனி பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக அதிகாலையில் பனி பொழிந்து வருகின்றது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் இன்று இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறை பனி பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.