நெல்லை லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லை லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பர் கோயில் பின்புறம் பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இத் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்து சம்ப்ரோக்ஷணம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, சம்ப்ரோக்ஷண விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. யாகசாலை பூஜைகள், புண்யாகவாசனம், திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் உபரிஷ்டா, தந்தரம், தசதானம், யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மூலவர், விமானம், பரிவார மூர்த்திகளுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம், அலங்கார திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு கருடசேவையும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com