இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லை லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2024, 5:39 am

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Story image

திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பர் கோயில் பின்புறம் பழமை வாய்ந்த லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இத் திருக்கோயிலில் திருப்பணிகள் செய்து சம்ப்ரோக்ஷணம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர்.

Story image

அதன்படி, சம்ப்ரோக்ஷண விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. யாகசாலை பூஜைகள், புண்யாகவாசனம், திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் உபரிஷ்டா, தந்தரம், தசதானம், யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மூலவர், விமானம், பரிவார மூர்த்திகளுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம், அலங்கார திருவாராதனம், சாற்றுமுறை கோஷ்டி நடைபெற்றது. இன்று இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு கருடசேவையும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.