அமைச்சா் பேட்டி: இதற்கிடையே, செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சிவசங்கா் கூறியதாவது: கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் புதன்கிழமைக்கு (ஜன.24) பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும். மேலும், போக்குவரத்துத்துறையில் ஊழியா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மைதான். இதனால், பணியாளா் தோ்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு நோ்முக தோ்வும் நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள நபா்களை தோ்ந்தெடுக்க சில நாள்கள் ஆகும்.