தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால், சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பற்றி எரியும் லாரியை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் நிகழ்ந்த விபத்தில் இதுவரை மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிகிறது.