பாடகச்சேரி பைரவசித்தர் திருமடத்தில் தைப்பூச திருவிழா

பாடகச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள  பைரவ சித்தர்  ராமலிங்க சுவாமிகள் 15 ஆம் ஆண்டு தைப்பூச பௌர்ணமி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
பாடகச்சேரி பைரவசித்தர் ராமலிங்க சுவாமிகள்.
பாடகச்சேரி பைரவசித்தர் ராமலிங்க சுவாமிகள்.

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் - கும்பகோணம் பேருந்து வழித்தடத்தில், பாடகச்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள  பைரவ சித்தர்  ராமலிங்க சுவாமிகள் 15 ஆம் ஆண்டு தைப்பூச பௌர்ணமி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு காலையில் திருமடத்தில் அன்னதானக் கொடியேற்று வைபவம், அதனைத் தொடர்ந்து அருட்பா பக்தி இசை நிகழ்ச்சியும், வள்ளல் பெருமானுக்கு மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது.

வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்.
வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்.

தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மாபேட்டை புலவர் பன்னீர்செல்வம் விழாவினை தலைமையேற்று நடத்தினார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் கிராம அன்னதான அறக்கட்டளை மற்றும் பாடகச்சேரி கிராம வாசிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com