சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் கடந்த இரு நாள்களாக நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு 2024 நிறைவடைந்தது.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் கல்விச் சிந்தனை அரங்கு ஜனவரி 24, 25(புதன், வியாழன்) ஆகிய இருநாள்கள் நடைபெற்றது.
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குத்துவிளக்கு ஏற்றி இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
கல்வி, தொழிநுட்பம், அரசியல் உள்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, தர்மேந்திர பிரதான், காங்கிரஸின் சசி தரூர், பாஜகவின் குஷ்பு, பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதீஸ் குமார், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.