திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 8 அடிய உயர முழு உருவ சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய உதயநிதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை கண்டாலே சிலருக்கு இப்போதெல்லாம் வயிறு எரிகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வேண்டும் என்ற உறுதி மொழியை கருணாநிதி சிலை முன்பு உறுதியேற்போம் என உதயிதி ஸ்டாலின் தெரிவித்தார்.