நீலகிரி: வட இந்தியா கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் நடுங்கும்போது, தமிழகத்தின் தெற்கில் உள்ள உதகை ஐஸ்லாந்தாக மாறிவருகிறது. வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் குறைந்து, ஈரப்பதம் 65 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் நீா்ப் பனியானது ஆவியாகி கடும் பனி மூட்டமாக காட்சியளித்தது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனி நிலவுகிறது. ஆனால், இந்த ஆண்டு, புயல் மழையால், பனிப்பொழிவு ஜனவரியில் தாமதமாக துவங்கியது. உதகை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காந்தல், தலை குந்தா போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது.
கடந்த ஒருவார காலமாக குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த உறைபனியின் கடும் குளிரால் பலர் காலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பொதுமக்கள் பலா் சாலையோரங்களில் தீ மூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா்.
வெள்ளை கம்பளம் விரிக்கப்பட்டது போல பச்சை புல்வெளிகளில், வாகனங்களில் பனி படலம் காணப்பட்டது.
இதையும் படிக்க | கடன் சுமையா?: தொழிலதிபர் வீட்டில் மூவர் பலி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள புல்வெளிகளின் பெரிய திட்டுகள் ஒரு அதிசய நிலத்தை ஒத்ததாகவும், பெரும்பாலும் வெள்ளை உறைபனி என்று அழைக்கப்படும், புதிய பனித்துளிகள் பச்சை புல் வெளிகள்மீதும் காணப்படுகிறது.
உதகை நகர், தளிகுண்டா, ஹெச்பிஎஃப், காந்தல் மற்றும் ஃபிங்கர்போஸ்ட் உள்ளிட்ட ஊட்டியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளை உறைபனி காணப்பட்டது.
வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஒரு அங்குலம் வரை பனிக்கட்டிகள் காணப்பட்டன.
உள்ளூர் வானிலை அதிகாரிகள் கூறுகையில், சமீபத்திய வாரங்களில் பகல் மற்றும் இரவு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாறுபாடு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலேயே பதிவாகி வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
உதகையில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் கால்நடைகளுக்கான தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



