இரு நாள்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் ஜன.31,பிப்.2 தேதிகளில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலைமையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: செவ்வாய்க்கிழமை (ஜன.30) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது.
புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (ஜன.31-பிப்.2) வரை தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
சனி, ஞாயிறுக்கிழமை (பிப்.3,4) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
உறைபனி எச்சரிக்கை: செவ்வாய்க்கிழமை(ஜன.30) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:
செவ்வாய்க்கிழமை(ஜன.30) குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.