அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தமிழக மின்வாரியத்துக்காக அதானி குழுமம் இறக்குமதி செய்த நிலக்கரியில் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து சில மாதங்களுக்கு முன்பு, ’ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட செய்தியில், இந்தோனேசியாவிலிருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு மிகக் குறைவான விலையில் வாங்கிய தரமற்ற நிலக்கரியை, உயர்தர நிலக்கரி என்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு வாங்கியதைவிட கூடுதலாக மூன்று மடங்கு விலைக்கு அதானி குழுமம் விற்றதாகவும் ரூ. 3,000 கோடி லாபம் அடைந்ததாகவும் ஒரு ஆய்வைக் குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாகவே, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிலக்கரி ஊழல் தொடர்பாக 2018-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளது.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் அளித்த புகார் மீது விசாரணையை தொடங்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் விசாரணை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளில் ரூ.24,000 கோடி ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் செய்த திமுகவினா் மீது சட்ட நடவடிக்கை
“குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” - திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக !

மடிக்கணினி வழங்கியதில் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


