பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டு வீரர் ஜெஸ்வின் தகுதி!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜொலிக்கும் தமிழ்நாட்டு வீரர்கள்
ஜெஸ்வின் ஆல்ட்ரின்(கோப்புப் படம்)
ஜெஸ்வின் ஆல்ட்ரின்(கோப்புப் படம்)
Updated on
1 min read

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருந்து 5 தடகள வீரர்கள் தேர்வாகி இருந்த நிலையில், ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதனிடையே பாரிஸ் 2024க்கான இந்திய ஒலிம்பிக் தடகள அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன், சுபா வெங்கடேசன், பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 பேரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து வந்தவர்கள் என்பதில் பெருமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com