மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துவரும் நிலையில் மத்திய துணைக் கண்காணிப்புக் குழு ஆய்வு மேற்கொள்கிறது.

News image

மத்திய துணைக் கண்காணிப்புக் குழுவினர்

Updated On :19 ஜூலை 2024, 6:53 am

DIN

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சுமார் நான்கு மாதங்களுக்குப் பின் 127.35 அடியாக உயர்ந்துள்ள நிலையில் இன்று மத்திய துணைக் கண்காணிப்புக் குழுவினர் அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அணையை ஆய்வு செவ்தற்காக தேக்கடியில் உள்ள படகுத் துறைக்கு வந்த துணைக் கண்காணிப்புக் குழுவினர் அங்கிருந்து அணைக்கு படகில் புறப்பட்டுச் சென்றனர்.

குழுத் தலைவரும் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளருமான சதீஷ் தலைமையிலான இக்குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிப் பொறியாளர் குமார் மற்றும் கேரள அரசு பிரதிநிதிகளான கட்டப்பணை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் அணில், உதவி பொறியாளர் கிரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் முல்லைப்பெரியாறு பிரதான அணை, பேபி அணை, மதகுகள், சுரங்கப்பாதை, கேலரி மற்றும் கசிவு நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யும் துணைக் கண்காணிப்புக் குழுவினர், அணையில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்புப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்குவார்கள்.

பின்னர் மாலையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆய்வறிக்கை, கண்காணிப்புக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.