ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? அமைச்சர் துரைமுருகன் பதில்

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி வரும் நிலையில் அதற்கு திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

News image

அமைச்சர் துரைமுருகன்.

Updated On :20 ஜூலை 2024, 7:17 pm IST

திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா இன்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதுபற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்கின்றனர்.

எங்கள் கட்சியின் அனைத்து அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத் தான் இருக்கிறோம்.

அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம். எத்தனை பதவிகள் வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமானது திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்புதான்” என்று கூறினார்.

இதுகுறித்து காட்பாடியில் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அங்கெங்கும் இல்லாத படி எங்கும் ஒலிக்கிறது, இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார். என் மகிழ்ச்சி, என்னுடைய குடும்ப நிகழ்ச்சிகளை விட கட்சியினுடைய நோக்கம், பலம் எல்லாத்தையும் எதிர்பார்ப்பவன்.

காரணம் என்னுடைய வாழ்க்கையில் அறுவது ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன்.

கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.