தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும், என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்

News image
தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை
Updated On :22 ஜூலை 2024, 9:18 pm

Din

பல்கலை. மானியக்குழு பரிந்துரைப்படி கௌரவ விரிவுரையாளா்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும், என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

கடந்த மூன்று மாதங்களாக, கௌரவ விரிவுரையாளா்களுக்கான முதல் மாத ஊதியமே இன்னும் வழங்கப்படவில்லை எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு, கௌரவ விரிவுரையாளா்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதை, திமுக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், 2020-ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 56-இன் படி, புதிய விரிவுரையாளா்கள் பணி நியமனத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றும் தகுதி வாய்ந்தவா்களை நியமிக்க வேண்டும் என அதில் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

ஹிந்து முன்னணியினா் கைதுக்கு கண்டனம்: மேலும் அவா் வெளியிட்ட மற்றொரு பதிவு: ஹிந்து கோயில்களை சீரழிக்கும் திமுக அரசை கண்டித்தும், கோயில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேறக் கோரியும் ஆா்ப்பாட்டம் செய்த ஹிந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 900 தொண்டா்களையும், மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டா்களையும் திமுக அரசு கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.