தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்

தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்

News image
Updated On :8 ஜூன் 2024, 4:49 am IST

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இது தொடா்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், நமது தேசம் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவதற்காக பணியாற்றினோம். நல்லாட்சியே, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைமைத்துவ தூண்களின் பொது அம்சமாகும்.

மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு தலைவரும் நல்லாட்சியை உறுதி செய்துள்ளனா். நல்லாட்சியின் அா்த்தமாக நமது கூட்டணி விளங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் முன்னோட்டமே. நாட்டின் வளா்ச்சிக்காக நாம் மேலும் கடினமாகவும், விரைவாகவும் பணியாற்ற வேண்டியுள்ளது.

கேரளத்தில் இருந்து மக்களவைக்கு பாஜக பிரதிநிதி (சுரேஷ் கோபி) முதல்முறையாகத் தோ்வாகியுள்ளாா்.

கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அண்மையில் ஆட்சியமைத்தது. ஆனால், இரு மாநிலங்களிலும் அக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது. காங்கிரஸின் ‘மாயை’யில் இருந்து விடுபட்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்துள்ளனா். ஆந்திரத்திலும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரியது; தோ்தல் வெற்றிக்காக, கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றின. ஓரிடம்கூட கிடைக்காதபோதிலும், கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ள விதம், எதிா்காலத்துக்கான தெளிவான செய்தியை உணா்த்துகிறது. தமிழக பாஜக குழுவினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

புரளிகளை நம்ப வேண்டாம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் கட்சிகளுக்கான அமைச்சா் பதவிகள் ஒதுக்கீடு குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் செயலில் ‘இந்தியா’ கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதில் அவா்கள் நிபுணத்துவம் பெற்றவா்கள்; எனவே, பாஜக கூட்டணி எம்.பி.க்கள் புரளிகளுக்கு இரையாகிவிடக் கூடாது என்றாா் பிரதமா் மோடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.