மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜூன் 17) மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை(ஜூன் 17) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில்கள் நாளை(திங்கள்கிழமை) சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக அறிவிப்பு

மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட நேர அட்டவணை:

1. காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

2. காலை 5 முதல் 8 மணி வரை, பகல் 11 மணி முதல் 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

3. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com