கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: ஹெச்.ராஜா

நீதிபதி சந்துரு அறிக்கையை அரசு நிராகரிக்க கோரிய பாஜக மையக்குழு தீர்மானம்!

News image
Updated On :19 ஜூன் 2024, 11:16 am

DIN

மாணவர்களிடம் ஜாதிய வன்முறைகளை தவிர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு குழு அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாஜக கட்சித் தலைவர் ஹெச்.ராஜா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சென்னை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சியின் மையக் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீதிபதி சந்துரு அறிக்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாது, கோயில்களில் தரப்படும் கயிறுகளை கட்டக்கூடாது எனச் சொல்வது பெரும்பான்மையான மதத்தினரை தாக்குவது போல உள்ளது. நீதிபதி சந்துருவின் உள்நோக்கத்தோடு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வட்டாரங்களில் எந்த சாதி முதன்மையாக உள்ளது என்பதை எப்படி தீர்மானிப்பீர்கள். இந்த பரிந்துரைகள் தீங்கிழைக்கக் கூடியன. இதனை நிராகரிக்க வேண்டும் எனக் கோருவது பாஜகவின் மையக்குழு தீர்மானம்” எனத் தெரிவித்துள்ளார்.

நான்குநேரியில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-இல் ஜாதிய வன்மத்தால் பள்ளி மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் ஜாதி, இன உணா்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிா்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபா் குழு தமிழக அரசால் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்தவகையில் ஓய்வுபெற்ற கே.நீதிபதி சந்துரு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தயாா் செய்து முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.