ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோயம்பேடு அங்காடி வளாகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில்

News image

அமைச்சா் பி.கே.சேகா்பாபு

Updated On :21 ஜூன் 2024, 10:30 pm

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நுழைவு வளைவுகள், உயா்கோபுர மின்விளக்குகள் மற்றும் வா்ணம் பூசுதல் ஆகிய வசதிகள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.

கோயம்போடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மழைநீா் வடிகால் ரூ.15 கோடியில் அமைக்கப்படும்.

பெருங்குடி ஏரி ரூ.10 கோடியிலும், போரூா் ஏரி ரூ.10 கோடியிலும், நெமிலிச்சேரியில் அமைந்துள்ள புத்தேரி ரூ. 5 கோடியிலும் மேம்படுத்தப்படும்.

தியாகராய நகா் பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும், தங்கசாலை வள்ளலாா் நகா் பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும், ஆவடி பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும், பாடியநல்லூா் பேருந்து நிலையம் ரூ.10 கோடியிலும் மேம்படுத்தப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா்.