மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இன்றும் அதிமுக வெளிநடப்பு!

இன்று சட்டப்பேரவையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்கின்றனர்

News image

எதிர்க்கட்சி வெளிநடப்பு

Updated On :22 ஜூன் 2024, 4:43 am

இரண்டாவது நாளாக அதிமுகவினர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்கின்றனர்.

இன்று நடக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத்திலும் அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்ததுடன், இன்றும் வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

எடப்பாடி கே. பழனிசாமி பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ”சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, முதலில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க வேண்டும். மேலும், எம்எல்ஏ ஒருவர் இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஆகையால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ குழு தான் விசாரிக்க வேண்டும். சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை பேசுவதற்காக தான். நேற்று நான் ஹோமிசோபில் மருந்து பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கூறினேன். ஆனால், திமுக அமைச்சர் ஓமிபிரசோல் மருந்து பற்றி பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.

நேற்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவினர் மற்றும் பாமகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மேலும், கேள்வி நேரத்தின் போது அதிமுகவினர் அமளியிலும் ஈடுபட்டனர். பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரித்த போதும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரவை விதிகளை மீறிய காரணங்களுக்காக அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

இருப்பினும், முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, பேரவைத் தலைவர் அப்பாவு அதிமுகவினரை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், அதிமுகவினர் பேரவைத் தலைவர் அப்பாவுவின் அழைப்பை நிராகரித்து, மறுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.