கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும், உயிரிழந்தோரின் குடும்பத்தாரையும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஜூன் 23) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கவனக்குறைவாக இருந்ததையும், தங்கள் வரம்பை மீறி அருந்தியதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு விழிப்புணர்வு அவசியம். தங்கள் உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் மனநல மருத்துவ மையங்களை அரசு உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
எப்போதாவது மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் சரி, அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தாலும் சரி, அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் எதுவாகினும் அது தீமையிலேயே முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் இதுவரை 56 பேர் பலியானதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டதாக 216 பேர் 4 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். 3 பேர் இறந்தனர். விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் 4 பேர் பலியான நிலையில், 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மருத்துவ கல்லூரியில் 18 பேர் இறந்த நிலையில், 30 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 31 பேர் இறந்த நிலையில், 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குறித்து உயிரிழந்த குடும்பங்களை சந்தித்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுற்றுலாப் பேருந்து விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

மகாராஷ்டிரம்: கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழப்பு - 8 போ் கைது

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



