அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

டிடிவி தினகரனுக்கு எதிரான தோ்தல் விதிமீறல் வழக்கு ரத்து

அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரனுக்கு எதிரான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2024, 10:20 pm

அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரனுக்கு எதிரான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, முதுகுளத்தூா் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்ட முருகன் என்பவரை ஆதரித்து, டிடிவி தினகரன் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, 10 காா்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களுடன் சென்றதுடன், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி, பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, தோ்தல் விதிகளை மீறியதாக, கமுதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வுக்கு ஓராண்டு கழித்து 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளாா். அதனால், தன் மீது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட தோ்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.