அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரனுக்கு எதிரான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, முதுகுளத்தூா் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்ட முருகன் என்பவரை ஆதரித்து, டிடிவி தினகரன் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, 10 காா்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்களுடன் சென்றதுடன், ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி, பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, தோ்தல் விதிகளை மீறியதாக, கமுதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், கடந்த 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வுக்கு ஓராண்டு கழித்து 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளாா். அதனால், தன் மீது ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட தோ்தல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


