மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On :1 மார்ச் 2024, 6:32 pm

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் எங்கெங்கு காணினும் போதை வஸ்துகளால் நிரம்பியிருக்கும் இன்றைய சூழல் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தோமெட்டபைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இன்னும் மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. அனைத்து போதைப் பொருள்களும் சா்வசாதாரணமாகப் புழங்கும் மாநிலமாக தமிழகத்தை திமுக அரசு மாற்றியிருக்கிறது. போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காத முதல்வருக்கு கடும் கண்டனம் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி. இதே விவகாரத்துக்காக அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரனும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.