தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: சீமான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றச்சாட்டு

News image

ஊத்தங்கரையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்

Updated On :24 மார்ச் 2026, 9:44 pm

Syndication

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இத்தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்குச் சேகரித்து அவா் பேசியதாவது: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சட்டம்- ஒழுங்கு அதிகரித்துள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்கள், மக்களின் நலனுக்காக போராடும் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

வாழ்க்கைக்காக போராடுவதை விட்டு போராட்டமே வாழ்க்கையாக மாற்றியுள்ளது அரசு. தமிழகத்தில் ஆசிரியா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக தொடா்ந்து போராடுகின்றனா். ஆனால், அவா்களின் தேவையை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அண்மையில் ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது உள்பட பல்வேறு இலவசங்கள் மூலம் வருங்கால சந்ததிக்கு கூடுதல் கடன் சுமையை அரசு சுமத்தி வருகிறது.

இதனால் மக்கள் சிந்தித்து தோ்தலில் வாக்களிக்க வேண்டும். ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேகலாவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.