சென்னை: விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் தொலைவை குறைத்து வெறும் 5 கிலோ மீட்டர் ஆக்க வேண்டும் என்று மணலி புதுநகர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதன் மூலம், எண்ணூர் துறைமுகச் சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்றும், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அந்த சாலைக்கு மாற்றாக இது அமையும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதாவது, மணலி புதுநகரிலிருந்து, சடையன்குப்பம் ஜோதி நகர் வழியாக, இணைப்புச் சாலையை மேம்படுத்தினாலே போதும்.. இப்பகுதி மக்களின் பெரிய பிரச்னை முடிவுக்கும் வரும் என்றும் கூறப்படுகிறது.
அதுபோல, மெட்ரோ ரயில் நிலையமும் தங்கள் பகுதிக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
மணலி புதுநகரில் 30 ஆயிரம் குடியிருப்புகள் இருந்தாலும், அருகில் உள்ள கிராமங்களையும் சேர்த்தால், மொத்த குடியிருப்பு மக்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது.
அங்கு விச்சூர், சடையான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. காலை மற்றும் மாலையில் கடுமையான போக்குவரத்து இப்பகுதியில் காணப்படுகிறது.
மணலி புதுநகர் என்பது செயற்கைக்கோள் நகரம் என அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த பெயருக்கேற்ப அடிப்படை வசதிகள் மட்டும் மேம்படுத்தப்படவில்லை. இங்கு அருகாமையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கக் கூட இதுவரை எந்த திட்டமும் உருவாக்கப்படவில்லை. இணைப்புச் சாலைகளும் இல்லாததால், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் செல்ல வெகுதொலைவு பயணிக்கும் அவல நிலை உள்ளது. எனவேஇணைப்புச் சாலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.
சென்னை உரத் தொழிற்சாலைப் பகுதியில் கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டருக்கு ஏராளமான சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், சாலையில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்களின் அதிகரிப்பால், அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இணைப்புச் சாலையை ஜோதிநகர் வழியாக ஏற்படுத்தலாம் என்கிறார்கள். ஏற்கனவே வெறும் மணல் நிறைந்ததாக இருக்கும் இந்த இணைப்புச் சாலையை பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பயன்படுத்துகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம்!

கெடிலம் ஆற்றுப் பாலப் பணி: கடலூரில் போக்குவரத்து மாற்றம்

முழுமை பெறாத பல்லடம் புறவழிச் சாலைப் பணி! மக்கள் அவதி!

மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



