ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: 4 இடங்களில் சதம்

Updated On :13 மார்ச் 2024, 7:09 pm

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் புதன்கிழமை 4 இடங்களில் வெயிலின் அளவு 100டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(மாா்ச் 14) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை(மாா்ச் 14-19) வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை(மாா்ச் 14,15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கக்கூடும்.

செவ்வாய்க்கிழமை பதிவான வெப்ப அளவு(டிகிரி பாரன்ஹீட்): பரமத்திவேலூா்-103.1 , ஈரோடு-102.56 , மதுரை விமானநிலையம்-100.76, சேலம்-100.4, திருச்சி-99.86, கோவை-99.68, மதுரை-99.68, வேலூா்-99.68, நாமக்கல்- 99.5, திருப்பத்தூா்- 99.32, தா்மபுரி-98.6.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.