தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

திமுக கூட்டணி எம்.பி. நவாஸ் கனியின் சகோதரருக்கு சொந்தமான கூரியர் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை

News image
Updated On :14 மார்ச் 2024, 12:23 pm IST

தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணி எம்.பி. நவாஸ் கனியின் சகோதரருக்கு சொந்தமான கூரியர் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தலைமை அலுவலகம், ராமநாதபுரம் அலுவலகம் என தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.

கூரியர் நிறுவனத்தை நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தலைமை இயக்குநராக இருந்து நடத்தி வருகிறார். நவாஸ் கனி நிர்வாக இயக்குநராக உள்ளார். மற்றொரு சகோதர் சிராஜூதீன் இணை இயக்குநராக இருந்து வருகிறார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்து வரும் நவாஸ் கனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானது கூரியர் நிறுவனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.