அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாளை தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை காலை 10 மணியளவில் அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகளை இறுதி தீவிரம் காட்டி வருகின்றன.
திமுக கூட்டணி பங்கீடு நேற்று இறுதியானநிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நாளை கையெழுத்தாகவுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.